உள்ளூர் செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு 11-ந் தேதி விடுமுறை அளிக்க வேண்டும்

Published On 2022-07-08 09:05 GMT   |   Update On 2022-07-08 09:05 GMT
  • பள்ளி, கல்லூரிகளுக்கு 11-ந் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என நவாஸ்கனி எம்.பி.கோரிக்கை வைத்துள்ளார்.
  • வருகிற 10-ந் தேதி இஸ்லாமியர்கள் பக்ரீத் பெருநாள் எனும் தியாகத் திருநாளைக் கொண்டாட உள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் எம்.பி.யும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவருமான நவாஸ்கனிமுதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விடுத்துள்ள கோரிக்கை கூறியிருப்பதாவது:-

வருகிற 10-ந் தேதி இஸ்லாமியர்கள் பக்ரீத் பெருநாள் எனும் தியாகத் திருநாளைக் கொண்டாட உள்ளனர். அன்று பெரும்பாலானோர் வெளி ஊர்களுக்கும், சொந்த ஊர்களுக்கும் சென்று பண்டிகையை கொண்டாடுபவர்களாக இருக்கின்றனர்.

வெளியூர்களுக்கு செல்பவர்கள் திரும்பும் வகையில் மறுநாளான 11-ந் தேதி அன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளித்தால் பெற்றோர்களும், மாணவர்களும் ஊர் திரும்புவதற்கு வசதியாக அமையும். பக்ரீத் பெருநாள் ஞாயிற்றுக்கிழமை வருவதால் மறு தினம் திங்கள்கிழமையும் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளிக்க முதல்-அமைச்சர் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News