உள்ளூர் செய்திகள்

ஓய்வூதியம் பெறுவோர் உயிர் வாழ் சான்றிதழை தபால்காரர் மூலமாக சமர்ப்பிக்கலாம்

Published On 2022-06-29 08:45 GMT   |   Update On 2022-06-29 08:45 GMT
  • ஓய்வூதியம் பெறுவோர் உயிர் வாழ் சான்றிதழை தபால்காரர் மூலமாக சமர்ப்பிக்கலாம் என அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
  • இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சித்ரா கூறியதாவது:-

ஜூலை 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை மாநில அரசின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் வீடுகளில் இருந்தே டிஜிட்டல் முறையில் உயிர் வாழ் சான்றிதழை தபால்காரர் மூலம் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தலைமை, துணை, கிளை தபால் நிலையங்களில் செய்யப்பட்டுள்ளது.

நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ்களை சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் 'ஜீவன் பிரமான்' திட்டத்தில் போஸ்டல் துறையின் கீழ் செயல்படும் 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி' மூலம் பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி, வீட்டிலிருந்த படியே சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும். தங்கள் பகுதி போஸ்ட்மேனிடம் ஆதார், அலைபேசி எண், பென்ஷன் எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால் சில நிமிடங்களில் சான்றிதழ் சமர்ப்பிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News