உள்ளூர் செய்திகள்
வள்ளியூர் சூட்டு பொத்தையில் பவுர்ணமி கிரிவலம்
- சூட்டு பொத்தை அடிவாரத்தில் உள்ள வனவிநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
- ஸ்ரீபுரம் சாமியார் பொத்தை ஆசிரமத்தில் ஒன்பது விளக்கு ஏற்றி திருவிழா பூஜை நடைபெற்றது.
வள்ளியூர்:
ஸ்ரீ முத்துகிருஷ்ணா மிஷன் சார்பில் மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் நேற்று வள்ளியூர் சூட்டு பொத்தையில் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு சூட்டு பொத்தை கிரிவலம் அடிவாரத்தில் உள்ள வனவிநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு "ஓம் நமோ பகவதே முத்துகிருஷ்ணாயா" மந்திரத்தை கூறிய வண்ணம் கிரிவலம் வந்தனர்.பின்னர் மாலை 4 மணிக்கு ஸ்ரீபுரம் சாமியார் பொத்தை ஆசிரமத்தில் மகா மேரு மண்டபத்தில் ஒன்பது விளக்கு ஏற்றி திருவிழா பூஜை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்தனர்.