உள்ளூர் செய்திகள்
பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் அம்பேத்கர் சிலை முன்பு மனு கொடுக்கும் போராட்டம்
- பட்டியல் இன மக்களுக்கு வழங்கும் நிதியை தமிழக அரசு முறையாக செலவு செய்யவில்லை.
- போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நெல்லை:
பா.ஜ.க. பட்டியல் அணி சார்பாக மத்திய அரசு பட்டியல் இன மக்களுக்கு வழங்கும் நிதியை தமிழக அரசு முறையாக செலவு செய்யவில்லை என கூறி நெல்லை சந்திப்பில் அம்பேத்கர் சிலை முன்பு மனு கொடுக்கும் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டியல் அணி மாவட்ட தலைவர் துளசிபாலா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொதுச் செயலாளர் முத்து பலவே சம், மாவட்ட செயலாளர் நாகராஜன், பட்டியல் அணி மாவட்ட செயலாளர்கள் தங்கராஜ், தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பட்டியல் இன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்க ளுக்காக ஒதுக்கப்படும் அரசு நிதியை அவர்களுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.