search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petition"

    • சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டி.
    • ராமநாதபுரம் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட இருப்பதால் ராமநாதபுரம் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்நிலையில், ராமநாதபரத்தில் போட்டியிடும் 5 ஓ.பன்னீர்செல்வங்களின் வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இதன்மூலம், ராமநாதபுரத்தில், 5 ஓ.பன்னீர்செல்வங்களும் சுயேச்சையாக சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியானது.

    • 85 வயது கடந்த முதியவர்கள் தங்கள் வீட்டிலேயே இருந்து வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
    • பணிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் 85 வயது முதல் 99 வயது வரையிலான முதியவர்கள் 23 ஆயிரத்து 100 பேரும், 100 வயதை கடந்தவர்கள் 795 பேரும் உள்ளனர்.

    இதில் 85 வயது கடந்த முதியவர்கள் தங்கள் வீட்டிலேயே இருந்து வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

    அதனடிப்படையில் நெல்லை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியவர்கள் வீடுகளிலேயே இருந்தவாறு வாக்களிக்கும் வகையிலான 12டி விண்ணப்பம் வாக்குச்சாவடி அலுவலர்களால் முதியவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மேலப் பாளையம் சிவராஜபுரம் பகுதியில் வசிக்கும் 90 வயது மூதாட்டியான வள்ளியம்மாளிடம் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அனந்த ராமகிருஷ்ணன், வீட்டில் இருந்து வாக்களிக்கும் வகையிலான விண்ணப்பத்தை வழங்கி உள்ளார்.

    அப்போது ஓட்டு கேட்டு வேட்பாளர்கள் தான் யாரோ வந்திருக்கிறார்கள் என்று நினைத்த மூதாட்டி வள்ளியம்மாள், அந்த விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு என் ஓட்டு உனக்குதான் பா, உனக்குத்தான் என் ஓட்டு என்று கூறியுள்ளார். உடனே கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் கலகலவென சிரித்து விட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பாராளுமன்ற பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 15 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.
    • போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 21.03.2024 வியாழக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் தலைமை கழகத்தில் நேர்காணல் நடைபெறும்

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் பாராளுமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை 19.03.2024 செவ்வாய்க் கிழமை அன்று காலை 11.00 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 20.03.2024 புதன்கிழமை மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    பாராளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர். மேலும், பாராளுமன்ற பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 15 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.

    பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 21.03.2024 வியாழக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் தலைமை கழகத்தில் நேர்காணல் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

    • ஜாமின் கோரி 2வது முறையாக மனு தாக்கல் செய்தார்.
    • ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது.

    சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, ஜாமின் கோரி 2வது முறையாக மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணையின்போது, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர்.பரங்கிப்பேட்டை பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். அந்த மனுவில், பரங்கிப்பேட்டை பகுதியில் சந்தை கடை தெரு மற்றும் குமரக்கோயில் தெற்கு தெரு பகுதியில் 40 ஆண்டு காலமாக வசித்து வருகின்றோம்.

    எங்களுக்கு சொந்த வீட்டு மனை இல்லாமல் தெருக்களில் வசித்து வருகின்றோம். மேலும் கூலி வேலை செய்து வருவதால் மிகவும் வறுமையில் இருந்து வருகின்றோம்.இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தி லும், குடிசை மாற்று வாரியத்திலும், வருவாய் துறை அலுவலகத்திலும் மனு அளித்தும் பலனில்லை.ஆகையால் தமிழக முதல மைச்சரால் வீட்டு மனை மற்றும் வீடு இல்லாத வர்களுக்கு வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    சாலை வசதி போடுவதற்கு அரசு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக, பொதுமக்களிடம் ஆணையர் கூறினர்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே மடுகரையில் 20 வருடங்களுக்கு முன்பு எஸ்.பி.ஆர். நகர், தங்கராஜ் நகர் உள்ளிட்ட மனை பிரிவுகள் உருவானது. இங்கு பலர் வீடு கட்டி குடியேறினர். ஆனால் இதனால் வரை அப்பகுதியில் சாலை வசதி இல்லை. இதனால் அப் பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

    கடந்த ஆண்டு அப்பகுதிக்கு சாலை வசதி போடுவதற்கு அரசு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக, பொதுமக்களிடம் ஆணையர் கூறினர்.

    இதன் மீது இதனால் வரை எந்தெந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் சாலை வசதி செய்து தரக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நெட்டப்பாக்கம் பஞ்சாயத்து ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், தொகுதி எம்.எல்.ஏ.விடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையேற்று பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • கடந்த 2020-ம் ஆண்டு இட்டமொழி ரோட்டில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மூதாட்டி தங்கம்மாள் முதியோர் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டு வந்துள்ளது.
    • இதற்கிடையே பல மாதங்களாக உதவித்தொகையை எடுக்காத தால் அந்த பணம் திரும்ப பெறப்பட்டுள்ளது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் காமராஜ்நகரை சேர்த்தவர் கூலித் தொழிலாளி பேச்சிமூத்து மனைவி தங்கம்மாள் (வயது95). கடந்த 3 வருடங்களுக்கு முன்பு முதியோர் உதவி தொகை கேட்டு சாத்தான்குளம் சமூகப் பாதுகாப்பு தாசில்தாரிடம் தங்கம்மாள் மனு கொடுத்திருந்தார்.

    அதன்பேரில் கடந்த 2020-ம் ஆண்டு இவரின் வங்கி கணக்கில் இட்டமொழி ரோட்டில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் அவரது முதியோர் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் வங்கி அதிகாரிகளோ மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகளோ தங்கமாளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதற்கிடையே பல மாதங்களாக உதவித்தொகையை எடுக்காத தால் அந்த பணம் திரும்ப பெறப்பட்டுள்ளது. இது குறித்து மூதாட்டி தங்கம்மாள் கூறும்போது, எனக்கு முதியோர் தொகை வந்துள்ளதா என பல முறை வங்கியிலும், தாலுகா அலுவலகத்திலும் கேட்டு வந்தேன். ஆனால் அதற்கு வங்கி அதிகாரிகளும், வருவாய்த்துறைனரும் சரியான பதிலை கூறவில்லை.

    இந்நிலையில் உறவினர் ஒருவர் மூலம் வங்கி கணக்கு புத்தகத்தை வங்கியில் உள்ள எந்திரத்தில் பதிவு செய்து பார்த்தபோது எனக்கு கடந்த ஏப்ரல் மாதம் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு அந்த பணத்தை எடுக்காததால், சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் மொத்தம் ரூ. 36 ஆயிரம் திரும்ப எடுத்து கொண்டது தெரியவந்தது. எனவே எனக்கு மீண்டும் முதியோர் உதவித் தொகை வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பி உள்ளேன். அதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

    • தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி அனைத்து துறைகளையும் பார்வையிட்டு குறை, நிறைகளை கேட்டறிந்தார்.
    • இதன்படி காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு 2,5,6,13 ஆகிய வார்டு பொதுமக்கள் பயனடைந்தனர்.

    ஆறுமுகநேரி:

    தமிழகத்தின் 138 நகராட்சி களில் தேர்வு செய்யப்பட்ட 8 நகராட்சிகளில் 'மக்களுடன் முதல்வர்' நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.

    இதனை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கானொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இவற்றில் காயல்பட்டினம் நகராட்சியும் ஒன்று ஆகும்.

    காயல்பட்டினம் நகராட்சி யின் சார்பில் ஜலாலியா மண்ட பத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, மருத்துவத்துறை, காவல்துறை, மாவட்டத் தொழில் துறை, சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் உள்பட 18 அரசு துறையினர் கலந்துக்கொண்ட னர்.

    இதில் பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார் மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கணினி மூலம் அனுப்பி ரசீது வழங்கப்பட்டது. இதன் மூலம் 465 மனுக்கள் பெறப்பட்டன. அனைத்தும் முதல்- அமைச்ச ரின் நேரடி பார்வைக்கு அனுப்பி வைக்கப்ப ட்டன. அப்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி அனைத்து துறைகளையும் பார்வையிட்டு குறை, நிறைகளை கேட்டறிந்தார். இதன்படி காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு 2,5,6,13 ஆகிய வார்டு பொதுமக்கள் பயனடை ந்தனர்.நிகழ்ச்சியில் மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் சொர்ணலதா, நகராட்சி மண்டல நிர்வாக இயக்குநர் விஜயலெட்சுமி, நகராட்சி மன்ற தலைவர் முத்துமுகம்மது, துணை த்தலைவர் சுல்தான்லெப்பை, ஆணை யாளர் குமார்சிங், திருச்செந்தூர் தாசில்தார் வாமணன், ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு தாசில்தார் கோபால கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பொங்கலரசி, தமிழ்நாடு வணிக நல வாரிய உறுப்பினரும் நகராட்சி கவுன்சிலருமான ரெங்கநாதன் என்ற சுகு, ஆறுமுகநேரி பேரூராட்சி துணை த்தலைவர் கல்யாணசுந்தரம், மின்வாரிய செயற்பொறியாளர் இளங்கோ வன், மேற்பார்வை யாளர் குருவம்மாள், சாகுபுரம் உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், உதவி மின்பொறியாளர் ஜெபஸ்சாம், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், காயாமொழி வட்டார மருத்துவ அலுவலர் ஹமீதுஹீல்மி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஹெப்சிபா லைட் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை சமூக பாதுகாப்பு திட்ட சிறப்பு துணை கலெக்டர் ரகுமான் தொகுத்து வழங்கினார்.

    இதன் பிறகு காயல்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கீழ லட்சுமிபுரம் ஆதிதிராவிடர் நல விடுதி ஆகிய இடங்களுக்கு மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

    • மண்ணச்சநல்லூரில் கலெக்டர் காரை பொதுமக்கள் வழி மறித்தனர்
    • செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்

    மண்ணச்சநல்லூர்,

    மண்ணச்சநல்லூரில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரதீப்குமார் வருகை தந்தார்.அப்போது அப்பகுதி மக்கள் அவரின் காரை வழிமறித்து மனு கொடுத்தனர்.அந்த மனுவில், மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர், காந்தி நகர், பி எஸ் ஏ நகர் பகுதியில் நீண்டகாலமாக சுமார் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.பாரதிநகரில் தனி நபர் ஒருவரின் காலி மனையில் மிகப்பெரிய தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் பொக்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.இந்த டவர் அமைக்கப்பட்டால் இப்பகுதி கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் டவர் அமைக்கும் இடம் அருகே குழந்தைகளின் விளையாட்டு மைதானம் உள்ளது.எனவே செல்போன் டவர் இப்பகுதியில் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

    • கடந்த 2017-ம் ஆண்டு இசக்கிமுத்து என்பவர் கந்து வட்டி கொடுமை தொடர்பாக மனு அளிக்க வந்திருந்தார்.
    • சுமார் 95 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவிலை சுற்றிலும் இணை கோவில்கள் உள்ளன.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    தீக்குளித்து பலி

    நெல்லை, தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட மாக இருந்தபோது நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசி தர்மம் பஞ்சாயத்து எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் கந்து வட்டி கொடுமை தொடர்பாக மனு அளிக்க வந்திருந்தார்.

    அப்போது அவருடன் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார். யாரும் எதிர்பாராத வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென இசக்கிமுத்து தனது குடும்பத்தினருடன் தீக்குளித்தார். இந்த சம்பவத்தில் இசக்கி முத்து அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இறந்து விட்டனர்.

    சகோதரர் மனு

    இது தொடர்பாக அவரது சகோதரர் கோபி அளித்த புகாரின் பேரில் பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக கோபி இன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது சகோதரர் குடும்பத்தினர் தீக்குளித்து இறந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 2022-ம் ஆண்டு சரிவர நடக்காத காரணத்தினால் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தோம். அதன்படி 6 வார காலத்திற்குள் வழக்கை முடிக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் இதுவரை வழக்கு விசாரணை என்பது மந்தமாகவே நடைபெற்று வருகிறது.

    இது தொடர்பாக போலீ சாரிடம் கேட்ட போது, வழக்கின் 4-வது குற்றவா ளியாக சேர்க்கப்பட்டுள்ள கார்த்திக் என்பவர் வெளிநாடு சென்று விட்டார். அவரை கண்டு பிடிக்க முடிய வில்லை என்று கூறி அலட்சியமாக பதில் கூறுகின்றனர். இதனால் வழக்கை முடிப்ப தில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

    எனவே தலைமறை வாக உள்ள 4-வது குற்ற வாளியை விரைந்து கண்டு பிடித்து இந்த வழக்கை நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    சாலை வசதி

    அம்பை அருகே உள்ள சின்ன சங்கரன்கோவில் பாடகலிங்க சுவாமி பக்தர்கள் மற்றும் உழவார பணி குழுவினர் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அம்பை வட்டம் மலையன்குளம் கிராமத்தில் பாடகலிங்க சுவாமி கோவில் உள்ளது. சுமார் 95 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவிலை சுற்றிலும் இணை கோவில்கள் உள்ளன.

    இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மாதம்தோறும் பல்வேறு பூஜைகள் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. திருவிழா காலங்களில் அம்பை கல்லிடைக்குறிச்சியில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த கோவிலுக்கு சரியான சாலை வசதி இல்லாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தரமான சாலை அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    • லாந்தை ெரயில்வே சுரங்கப்பாதையை மேம்பாலமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை அளித்தனர்.
    • மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதிய மைச்சர் நிர்மலா சீதாரா மன் வருகை தந்தார். அப்போது திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் லாந்தை கிராம பொதுமக்கள் சார்பில் கிராம தலைவர் தங்கவேல் அளித்த கோரிக்கை மனுவில் கூறியி ருந்ததாவது:-

    லாந்தை, கண்ணணை, பெரியதாமரைக்குடி, சின்ன தாமரைக்குடி, திருப்பனை என ஐந்து கிராமங்களை உள்ளடக்கி, சுமார் 600 குடும்பங்களைக் கொண்ட 2,500-க்கும் மேற் பட்ட மக்கள் பயன்படுத்தும் இந்த ஒரு வழிச் சாலையில் தான் தற்போது ெரயில்வே சுரங்கப்பாதை அமைய பெற்றி ருக்கிறது. இந்த கிராமங்களை நகரத்துடன் இணைக்க வேறு எந்த பாதையும் இல்லை.

    மேலும் மேற்கில் 6 கி.மீ. தூரத்திலும், வடமேற்கில் 10 கி.மீ. தூரத்திற்கு அப்பாலும் தெற்கில் 7 கி.மீ. அளவில் இருந்து கிழக்கு நோக்கி வரும் மழை நீர் ராமநாதபுரம் பெரிய கண்மாயின் தென்கலுங்குக்கு சென்று கடலில் கலக்கும் ஆற்று வழித்தடக் கால்வாயை மறைத்து தான் தடுப்பணை போல தான் இந்த சுரங்கப் பாதை அமைந்திருக்கிறது.

    ெரயில்வே தண்டவாளத் தின் இருபுறமும் வரும் உபரிநீர் நேராக சென்று கடலில் கலப் பதை தடுக்கும் விதமாக தடுப் பணை போல் இந்த பாலம் அமைந்துள்ளது. பாலத் தின் இரு முகப்புகளும் இரு வாக னங்கன் ஒன்றாக ஒரே நேரத் தில் கடந்து செல்ல இயலாத வகையில் குறுகலாக அதாவது வெறும் 15 அடியிலிருந்து 20 அடி தான் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படு கிறது. தேசிய நெடுஞ்சா லைக்கும், ெரயில்வே தண்டவா ளத்திற்கும் இடையே மிக குறைந்த 30 மீட்டருக்குள் தூரம் இருப்பதால் மேற்கில் இருந்து வரும் தண்ணீர் முழுவதும் அங்கேயே தேங்கி விடுகிறது. இதனால் சுரங்கப்பாதையில் இருந்து 100 மீ. தூரத்திற்கு மற்றும் இருக்கும் மெக்கா நகர் 60 வீடுகளும், செய்யது அம் மாள் பொறியியல் கல்லூரியும் நீரில் மிதக்கிறது.

    மேற்கண்ட ஐந்து கிராமங் களை சுற்றிலும் கிழக்கில் பெரிய கண்மாய் கலுங்கும், தெற்கில் திருப்பனை கண்மாய், மேற்கில் லாந்தை கண்மாய் கலுங்கின் ஆற்று கால்வாயும் மற்றொரு தெற்குப் பகுதியில், பெரிய தாமரைக்குடி, சின்ன தாமரைக்குடி கண்மாயிகளும், வடக்கில் ராமநாதபுரம் பெரிய கண்மாய் அமைந்திருப்பதால் மாற்று வழித்தடமோ, சாலையோ இல்லை. எனவே இந்த சுரங் கப்பாதையில் தான் பள்ளி வாகனங்கள், டெம்போக்கள், ஆட்டோ, விவசாய பொருட் களை எடுத்துச் செல்லும் லாரி கள், இருசக்கர வாகனங் கள், அவசரத் தேவைக்கு ஆம்பு லன்ஸ், நகரப்பேருந்து என இந்த வழியில் தான் செல்கிறது.

    சிறிய மழை பெய்தால்கூட சுற்றியுள்ள அனைத்து வழித–டங்களில் இருந்தும் தண்ணீர் வந்து சுரங்கப்பாதைக்குள் தேங்குவதால் மழைநீரை வெளியேற்ற 6 மணி முதல் 7 மணி நேரம் வரை ஆகிறது. அதுவரை இருசக்கர வாகனம் உட்பட எந்தவித போக்குவரத்து இல்லாமல் ஊருக்குள்ளேயே அந்த பகுதி மக்கள் முடங்கும் நிலை உள்ளது. மேலும் 7 கீ.மீ தொலைவில் உள்ள ராமநாத புரம் நகரத்திற்கும் பிற ஊர்க ளுக்கும் செல்ல முடியாமல் எவ்வித தொடர்பின்றி தீவு போல ஆகிவிடுகிறது.

    பிற மாவட்டங்களை போல இல்லாமல் பூலோக ரீதியாக கடற்கரை பகுதி என்பதாலும் அனைத்து கண்மாய்களின் உபரிநீர் வந்து சேரும் கடைநிலைப் பகுதியாக இருப்பதாலும் பாலம் அமைந்து இருப்பது தாழ்வாகவும் அதன் தண்ணீர் வெளியேரும் பகுதி உயர்வாக இருப்பதாலும் பெரிய கண்மாய் கலுங்கு திறந்தால் பாலத்தை முழ்கடிக் கும் அளவுக்கு தண்ணீர் வரும் பகுதி என்பதாலும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தண் ணீரை வெளியேற்ற இயல வில்லை.தொடர்ந்து மேற்கண்ட கிராம மக்கள் பெரும் துயரங்க ளையும், துன்பங்களை யும் சந்தித்து வருவதால் அன்றாட வாழ்க்கையே பெரும் பாதிப் புக்கு உள்ளாகிறது.

    மேலும் நெடுஞ்சாலைத் துறை நான்குவழி சாலை அமைக்க இந்த பாலம் அமைந்து இருக்கும் பகுதியை யும் கையகபடுத்தி உள்ளார்கள். அதனை தொடர்ந்து இந்த பாலத்திற்கு நேரே உள்ள லாந்தை காலணி பகுதியில் உள்ள 30 வீடுகளையும் கைய கப்படுத்தி உள்ளனர். இதனால் இந்த மக்களின் வாழ்வாதாரமும் கேள்வி குறியாக உள்ளது. இவ்வாறு கையகப்படுத்தி உள்ளதால் எதிர்காலத்தில் நான்குவழி சாலை வந்தால் இந்த பாலத்திலிருந்து கிராம மக்கள் வெளியேரும் பொழுது விபத்து ஏற்படும் பகுதியாக மாறும் சூழல் உள்ளது.எனவே சமூகம் தயவு கூர்ந்து இப்பி ரச்சனையில் சிறப்பு கவனம் செலுத்தி சுரங்கபா தைக்கு மாற்றாக ஆள் உள்ள கேட்டா கவோ அல்லது மேம்பாலமா கவோ தரம் உயர்த்தி கொடுத்து பெரும்பான்மையாக விவசாய பெருங்குடி மக்கள் மட்டுமே வாழ்ந்து வரும் இப்பகுதி மக்களுக்கு மறுவாழ்வு அளித்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி ஆர்.முருகேசன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில சேவா துணைத்தலைவர் பிரபாவதி, விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் முகவை சிவா (எ) சிவசாமி உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

    • சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் 11 பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • போதிய மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் மக்கள் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வட்டத்தின் தலைமையிட மருத்துவமனையாக அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் டாக்டர் உள்ளிட்ட 11 பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாத்தான்குளம் பா.ஜ.க. தலைவர் சரவணன் தலைமையில் நகரத் தலைவர் ஜோசப் ஜெபராஜ், ஒன்றிய பொதுச் செயலர் ஜெயராஜேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் சாத்தான்குளம் தாசில்தார் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் பிரபுவிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் உள்ளிட்ட 11 பணியிடங்கள் காலியாக உள்ளது. மருத்துவமனைக்கு தற்காலிகமாக மருத்துவர்கள் வந்து செல்கின்றனர். போதிய மருத்துவர்கள், பணியாளர்கள் இல்லாததால் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு வரும் மக்கள் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர். எனவே அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க பரிந்துரைக்க வேண்டும் என கூறி இருந்தனர்.

    ×