உள்ளூர் செய்திகள்

கோவையில் தந்தை இறந்த துக்கத்தில் அதிகாரி தற்கொலை

Published On 2022-07-30 08:12 GMT   |   Update On 2022-07-30 08:12 GMT
  • ரநத்தத்தில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்.
  • 27-ந் தேதி இவரது தந்தை சந்திரசேகரன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

கோவை

கோவை பீளமேடு அருகே உள்ள காந்திமாநகரை சேர்ந்தவர் அர்ஜூன் (வயது 28). இவர் கீரநத்தத்தில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 27-ந் தேதி இவரது தந்தை சந்திரசேகரன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். தந்தை இறந்தால் அர்ஜூன் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட அர்ஜூனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News