உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டி அருகே லாரி மோதி செங்கல் தொழிலாளி பலி

Published On 2022-07-16 09:42 GMT   |   Update On 2022-07-16 09:42 GMT
  • விக்கிரவாண்டி அருகே லாரி மோதி செங்கல் தொழிலாளி பலி ஆனார்.
  • புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே உள்ள அனுமந்தபுரத்தை சேர்ந்தவர்கள் அய்யனார் மகன் குரு ( 35 ) , குப்புசாமி மகன் தீர்த்தமலை ( 40 )ஆகிய இருவரும் விக்கிரவாண்டி அருகே உள்ள சிறு வள்ளிக்குப்பம் கிராமத்தில் அருகே செங்கல் சூலையில் செங்கல் அறுக்கும் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று மதியம் அவர்களுடைய சொந்த ஊரில் உறவினரின் மஞ்சள் நீர் சுப விசேஷத்திற்கு குரு தீர்த்தமலை இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு விசேஷத்தை முடித்துக் கொண்டு இரவு 10 மணிக்கு மீண்டும் செங்கல் அறுக்கும் இடத்திற்கு மோட்டார் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்,

அப்பொ ழுது பனையபுரம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது பாண்டியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது இதில் குரு தீர்த்தமலை ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து அவர்கள் உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார் ,அதில் குரு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இது தொடர்பாக புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இறந்தகுருவிற்கு சரிதா என்ற மனைவியும் திரிஷா, யோகேஸ்வரன், இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News