உள்ளூர் செய்திகள்
தருமபுரி அருகே அரசு பேருந்தின் படிக்கட்டு உடைந்து சாலையில் விழுந்த மாணவர்கள்
- பள்ளி மாணவர்கள் படியில் நின்று கொண்டு பயணித்ததாக கூறப்படுகிறது.
- வேகத்தடையில் ஏறி இறங்கும் போது திடீரென பேருந்தின் கடைசி படிக்கட்டு உடைந்துள்ளது.
தொப்பூர்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள சேலம்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலை சவுளூர் பேருந்து நிறுத்தம் அருகில் இன்று சிவாடி பகுதி கிராமத்திலிருந்து பள்ளி மாணவர்களை அரசு பஸ் ஏற்றிச்சென்றது.
இந்த அரசு பேருந்து எண்-2 காலையில் 8-46 மணிக்கு பள்ளி மாணவர்கள் படியில் நின்று கொண்டு பயணித்ததாக கூறப்படுகிறது.
அதனை அடுத்து பேருந்து சவுளூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கும் போது திடீரென பேருந்தின் கடைசி படிக்கட்டு உடைந்துள்ளது.
அப்பொழுது படிக்கட்டில் பயணம் செய்த 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரோட்டில் விழுந்துள்ளனர்.
அதில் ஒரு பள்ளி மாணவனுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. அரசு பேருந்து மாணவர்கள் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென படிகட்டு உடைந்து விபத்துக்குள்ளானது மாணவர்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.