உள்ளூர் செய்திகள்

பெண்ணை தாக்கி நகை பறிப்பு

Published On 2022-07-02 08:21 GMT   |   Update On 2022-07-02 08:21 GMT
  • மதுரை அருகே பெண்ணை தாக்கி நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து 25 பவுன் நகைகளை பறித்துச் சென்றது.

மதுரை

செல்லூர், மீனாட்சிபுரம், பூமி உருண்டை தெருவை சேர்ந்த ஆசைத்தம்பி மனைவி லீனாவதி (38). சம்பவத்தன்று மாலை இவர் வீட்டில் இருந்தார். அங்கு வந்த 5 பேர் கும்பல் தகராறில் ஈடுபட்டது. இதில் லீனாவதி வீட்டை பூட்டிக் கொண்டார். அந்த கும்பல் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து 25 பவுன் நகைகளை பறித்துச் சென்றது.

இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த தாக்குதல் நடந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து லீனாவதியை தாக்கிய மீனாட்சிபுரம் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த நல்லதம்பி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தப்பி ஓடிய நல்லதம்பி மனைவி சாந்தி, மகன் கவுதம், உறவினர்கள் சக்கரை அம்மாள், தேனம்மாள் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News