உள்ளூர் செய்திகள்

இளம்பெண் எரித்து ெகாலை

Published On 2022-07-24 09:05 GMT   |   Update On 2022-07-24 09:05 GMT
  • இளம்பெண் எரித்து ெகாலை செய்யப்பட்டார்.
  • அந்த பெண் ெகாலை செய்யப்பட்டி ருக்கலாம் என ேபாலீசார் கருதுகின்றனர்.

 உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை ஆத்தங்கரைபட்டி சுடுகாட்டில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

இதுபற்றி பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் எழுமலை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பாதி எரிந்த நிலையில் கிடந்த இளம்பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அவரது அருகில் ரூ.40 ஆயிரம் பணம் எரிந்த நிலையில் கிடந்தது. அந்த பெண் கொலை செய்யப்பட்டி ருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

மேலும் எதற்காக அந்த பெண் கொலை செய்யப்பட்டார். எரிந்த கிடந்த பணம் யாருக்கு சொந்தமானது? பாலியல் பலாத்காரம் செய்து அந்த பெண் கொலை செய்யப்பட்டாரா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News