உள்ளூர் செய்திகள்

பலியான கோகுல்

வாலிபர் நீரில் மூழ்கி சாவு

Published On 2022-07-31 08:01 GMT   |   Update On 2022-07-31 09:30 GMT
  • திருமங்கலம் அருகே வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
  • நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர்.

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள வடகரை கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கோகுல்(21). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார்.

இவரது நண்பர்கள் கார்த்திக், பொன்ராசு,சிவராம பாண்டி, லோகேஷ், ராகுல் ஆகிய 6 பேரும் திருமங்கலம் அருகே உள்ள சொக்கநாதன் பட்டியில் செல்லையா என்பவருடைய தோட்ட கிணற்றில் குளிக்கச் சென்றனர்.

அப்போது கோகுல் திடீரென்று கிணற்றில் மூழ்கினார். நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் கோகுல் தண்ணீரில் மூழ்கி பலியானார். இது–குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் 60 அடி ஆழ கிணற்றில் மூழ்கிய கோகுலின் உடலை 6 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்டனர்.

அவரது உடல் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிேசாதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  

Tags:    

Similar News