உள்ளூர் செய்திகள்

ரெயில் மோதி வாலிபர் சாவு

Published On 2022-07-19 08:50 GMT   |   Update On 2022-07-19 08:50 GMT
  • ரெயில் மோதி வாலிபர் இறந்தார்.
  • அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

மதுரை

மதுரை கூடல்நகர்-சமயநல்லூர் இடையே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் சம்பவத்தன்று நள்ளிரவு தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது மதுரையில் இருந்து திண்டுக்கல் மார்க்க மாக சென்ற ெரயில் மோதியது. இதில் அந்த நபர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அவர் சிகப்பு, நீல கலர் கோடு போட்ட முழுக்கை சட்டை, வெள்ளை கலர் முண்டா பனியன், சிமெண்ட் கலர் பேண்ட் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக விளாங்குடி கிராம நிர்வாக அலுவலர் நாகராஜ் கொடுத்த புகாரின் பேரில் ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான நபர் பற்றி யாருக்கேனும் அடையாளம் தெரிந்தால் மதுரை இருப்பு பாதை போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News