search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teenager"

    • பொம்மைகளுடன் பலதார உறவில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    • ஹாலோவின் பொருட்கள் விற்கும் தளத்தில் பார்த்த பொம்மைகளுடன் காதலில் விழுந்துள்ளார்.

    பொம்மைகள் மீது பெண்களுக்கு அதிக ஆசை இருப்பதை காண முடியும். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பொம்மைகள் மீதான காதலால் பொம்மைகளை திருமணம் செய்து கொண்டு வாழ்வதாக சமூக வலைதளங்களில் அடையாளப்படுத்தி இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.

    அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் பெலிசிட்டி காட்லெக் என்ற 25 வயது பெண் தன்னை பொருட்கள் மீதான ஈர்ப்பாளர் என்று கூறி உள்ள அவர், பொம்மைகளுடன் பலதார உறவில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இவர் ஹாலோவின் பொருட்கள் விற்கும் தளத்தில் பார்த்த பொம்மைகளுடன் காதலில் விழுந்துள்ளார். இந்நிலையில் 6 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் பேய் பொம்மையான கெல்லி ரோஸியுடன் முதல் திருமணத்தை மேற்கொண்ட பெலிசிட்டி தற்போது ராபர்ட் என்ற ஆண் பொம்மையை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், இவரின் துணையுடன் 10 பொம்மை குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரேச்சல் லூனா, பில்லி என தற்போது 10 பொம்மை குழந்கைள் இருப்பதாக கூறி உள்ள பெலிசிட்டி, ராபர்ட்டை திருமணம் செய்து கொண்டதால் கெல்லி பொறாமை கொள்ள மாட்டாள் எனவும், அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

    • கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் வித்யாராணியை ஆதரித்து சீமான் பேசினார்.
    • சம்பவத்தால் பிரசார கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வித்யாராணி வீரப்பனை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மாலை மத்தூர், பர்கூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து இரவு கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் வித்யாராணியை ஆதரித்து சீமான் பேசினார்.

    அப்போது சீமான் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது கூட்டத்தில் இருந்து ஒரு வாலிபர் திடீரென்று ஓடிவந்து அவரை கட்டி பிடித்து செல்பி எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    உடனே ஆதரவாளர்கள் ஓடிவந்து அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தி மேடையில் இருந்து கீழே இறங்கிவிட்டனர்.

    இதனால் சீமான் அந்த வாலிபரை முறைத்தபடி திட்டினார். இதனைத்தொடர்ந்து அவர் தனது பேச்சை தொடர்ந்தார். இந்த சம்பவத்தால் பிரசார கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    • வாலிபர் வீடியோ கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்தார்.
    • 4 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாலகுடாவில் உள்ள கல்லூரி அருகே வணிகவளாகத்தில் 4 வாலிபர்கள் நேற்று பாலஸ்தீன தேசிய கொடியை கையில் பிடித்தபடி நின்று கொண்டு இருந்தனர்.

    அதனை ஒரு வாலிபர் வீடியோ கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    4 மணி நேரம் பாலஸ்தீன தேசிய கொடியை கையில் பிடித்தபடி வாலிபர்கள் அங்கேயே நின்று கொண்டு இருந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

    இருப்பினும் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    • ஹனுமான் நாயக் சேக் பேட்டையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடைக்குச் சென்றார்.
    • இதனைக் கண்டு சூப்பர் மார்க்கெட் மேலாளர் அதிர்ச்சி அடைந்தார்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சேக் பேட்டையை சேர்ந்தவர் ஹனுமான் நாயக் (வயது 22). இவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி வருகிறார்.

    இந்த நிலையில் ஹனுமான் நாயக் சேக் பேட்டையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடைக்குச் சென்றார்.

    அங்கிருந்து மாட்டிக்கொள்ளாமல் சாக்லேட் திருடி சாப்பிடுவது எப்படி என்று பேசியபடி ஒரு சாக்லேட்டை நைசாக திருடி சாப்பிட்டார். இதனை அவரது நண்பர் ஒருவர் வீடியோ எடுத்தார்.

    அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். இதனைக் கண்டு சூப்பர் மார்க்கெட் மேலாளர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சாக்லேட் திருடியது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அனுமான் நாயக் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்த நண்பர்கள் மைக் செட் மூலம் தகவல் தெரிவித்து அவரை கண்டுபிடிக்க முயன்றனர்.
    • சங்கரின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வருசநாடு:

    சென்னை திருநின்றவூர் புதிய சாலைத் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 40). கூலித் தொழிலாளி. திருமணமாகாத இவர் கடந்த 31-ந் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு யாத்திரை குழுவினருடன் சபரிமலைக்கு மாலை அணிந்து புறப்பட்டார்.

    கடந்த 3-ந் தேதி சபரிமலைக்கு சென்று அனைவரும் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மலையை விட்டு இறங்கிய போது பம்பை ஆற்றங்கரையில் திடீரென சங்கர் மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்த நண்பர்கள் மைக் செட் மூலம் தகவல் தெரிவித்து அவரை கண்டுபிடிக்க முயன்றனர்.

    அப்போது சங்கர் மாலையை கழற்றி விட்டு இருமுடி இல்லாமல் வந்துள்ளார். இது குறித்து குருசாமி அவரிடம் கேட்ட போது அவர் போதையில் இருந்தது போல உளறியுள்ளார். அதன் பிறகு தேனி மாவட்டம் மாளிகைப்பாறை கருப்பசுவாமி கோவிலுக்கு அவர்கள் வந்தனர். அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு பார்த்த போது மீண்டும் சங்கர் மாயமானார்.

    சில மணி நேரம் கழித்து வந்த சங்கர் போதையில் இருந்தது தெரிய வந்தது. இதனால் அவரை கண்டித்து வண்டியில் ஏற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர் அளவுக்கு அதிகமாக போதையில் இருந்ததால் அங்கேயே விட்டுச் சென்றனர்.

    போதை தெளிந்து எழுந்த சங்கர் செல்போனில் உடன் வந்த தனது நண்பர்களுக்கு போன் செய்தார். அப்போது தாங்கள் சென்னைக்கு புறப்பட்டு விட்டதாக கூறிவிட்டனர். இதனால் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த சங்கர் தங்கம்மாள்புரம் பகுதியில் இருந்த சர்ச் முன்பு மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலை அப்பகுதி மக்கள் இது குறித்து கடமலைக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது மேற்கண்ட விபரங்கள் தெரிய வந்தது.

    இதனையடுத்து சென்னையில் உள்ள அவரது சகோதரி கோமதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தற்கொலை செய்து கொண்ட சங்கரின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சபரிமலைக்கு சென்று திரும்பிய போது வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மம்முட்டியின் ரசிகர்கள் உள்பட பலரும் சனோஜூக்கு கண்டனம் தெரிவித்தனர்.
    • தான் அன்றைய தினம் மது போதையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வரும் புத்தாண்டில் நிகழ வேண்டிய மாற்றங்கள் என்ற தலைப்பில் ஒரு யூடியூப் சேனல் நிகழ்ச்சி நடத்தியது. இதில் பங்கேற்ற சனோஜ் என்பவர், நடிகர் மம்முட்டி இறக்க வேண்டும் என்று பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. மம்முட்டியின் ரசிகர்கள் உள்பட பலரும் சனோஜூக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு சனோஜ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தான் அன்றைய தினம் மது போதையில் இருந்ததாக தெரிவித்துள்ளார். தான் 2 நாட்களாக தூங்கவில்லை என்றும், தனது செயலுக்காக மம்முட்டி, அவரது மகன் மற்றும் குடும்பத்தினர், பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

    • சூர்யா மற்றும் சரத் ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது.
    • அதிர்ச்சியடைந்த உறவினர்கள் எடத்துவா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மன்னார்காடு பகுதியை சேர்ந்தவர் சூர்யா(வயது33). இவர் கோவளத்தில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

    அதே மருத்துவமனையில் மலப்புரம் பகுதியை சேர்ந்த வாலிபர் சரத்(28) என்பவர் சிகிச்சை நிபுணராக பணியாற்றுகிறார். ஒரே மருத்துவமனையில் பணிபுரிந்ததால் சூர்யா மற்றும் சரத் ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது.

    சம்பவத்தன்று சூர்யா, கொச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்கு அழைத்து வந்துள்ளார். அந்த பெண்ணை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்திருந்தார்.

    இந்நிலையில் அந்த அறைக்கு காதலன் சரத்தை, சூர்யா வரவழைத்துள்ளார். அப்போது அவர், சூர்யா அழைத்து வந்த பெண்ணுக்கு மது கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்துள்ளார். அதனை இளம்பெண் குடிக்க மறுத்திருக்கிறார். இருந்தபோதிலும் அவரை வலுக்கட்டாயமாக மது கலந்த குளிர்பானத்தை குடிக்கச் செய்திருக்கின்றனர்.

    இதனால் அந்த இளம் பெண், சிறிது நேரத்தில் மயங்கினார். இதையடுத்து அந்த இளம்பெண்ணை மயக்க நிலையிலேயே சரத் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இளம்பெண்ணை சரத் பாலியல் பலாத்காரம் செய்ததை சூர்யா தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார்.

    பின்பு சிறிது நேரத்தில் அந்த இளம்பெண் மயக்கம் தெளிந்து எழுந்திருக்கிறார். அதன் பிறகே, தனக்கு நேர்ந்த கொடுமை அவருக்கு தெரியவந்தது. மேலும், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை சூர்யா வீடியோ எடுத்ததையறிந்து அதிர்ச்சியடைந்தார்.

    பின்பு அந்த இளம்பெண், அங்கிருந்து தனது வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டார். தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தனது உறவினர்களிடம் தெரிவித்தார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அதுபற்றி எடத்துவா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    சம்பவம் நடந்தது கோவளம் என்பதால், அங்குள்ள போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் கோவளம் போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். பின்பு அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    மது கலந்த குளிர்பானத்தை கொடுத்து மயங்கச் செய்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் சரத் கைது செய்யப்பட்டார். காதலனுக்கு இளம்பெண்ணை விருந்தாக்கிய சூர்யாவும் கைது செய்யப்பட்டார். பலாத்காரம் செய்ததை வீடியோ படம் எடுக்க பயன்படுத்திய அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    இளம்பெண்ணை காதலனுக்கு விருந்தாக்கிய பெண் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கோவளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரு லிங்கை அனுப்பி அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக கமிஷன் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறினர்.
    • இது தொடர்பாக அந்த நபரை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றம் அடைந்த அவர் சம்பவம் குறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூரை சேர்ந்தவர் 32 வயது வாலிபர்். இவருக்கு பகுதி நேர வேலை ெதாடர்பாக வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி வந்தது. அதில் தொடர்பு கொண்ட போது மறுமுனையில் பேசிய மர்ம நபர் ஒரு லிங்கை அனுப்பி அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக கமிஷன் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறினர்.

    இதனை நம்பிய அவர் 7 தவணைகளாக ரூ.6 லட்சத்து 71 ஆயித்து 241 - ஐ அவர் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பினார். ஆனால் அவர் கூறிய படி கமிஷன் கொடுக்கவில்லை. இது தொடர்பாக அந்த நபரை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றம் அடைந்த அவர் சம்பவம் குறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கோமளம் கைகள் மற்றும் வாய் துணியால் கட்டப்பட்டு அவர் பேச முடியாமல் இருப்பதை பார்த்தார்.
    • அதிர்ச்சியடைந்த அனிதா திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.

    கோவை:

    கோவை சித்தாபுதூர் அருகே உள்ள புதியவர் நகரை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி கோமளம் (வயது 66). இவரது கணவர் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இதனால் கோமளம் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டு இருந்தார். அப்போது 2 வாலிபர்கள் வீட்டிற்குள் அதுமீறி நுழைந்தனர். இதனை பார்த்த மூதாட்டி சத்தம் போட்டார். உடனடியாக அந்த வாலிபர்கள் கோமளத்தின் கைகளையும், வாயையும் துணியால் கட்டினர். பின்னர் அவர் அணிந்து இருந்த செயின், கம்மல், வளையல் ஆகியவற்றை பறித்தனர். இதனை தொடர்ந்து வாலிபர்கள் வீட்டின் பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்தனர்.

    கோமளத்துக்கு அவரது சகோதரர் மனைவி அனிதா என்பவர் சாப்பாடு கொண்டு வருவது வழக்கம். இதேபோல இரவு சாப்பாடு சமைத்து எடுத்துக்கொண்டு கோமளத்துக்கு கொடுப்பதற்காக சென்றார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவை யாரும் திறக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அனிதா ஜன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப்பார்த்தார். அப்போது வீட்டிற்கு 2 வாலிபர்கள் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    மேலும் கோமளம் கைகள் மற்றும் வாய் துணியால் கட்டப்பட்டு அவர் பேச முடியாமல் இருப்பதை பார்த்தார். பின்னர் அனிதா வீட்டின் கதவை வெளிபக்கமாக பூட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர்கள் கதவை திறக்கும்படி கத்தினர். கதவை திறக்கவில்லை என்றால் கோமளத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதனால் பயந்த அனிதா கதவை திறந்தார். அப்போது அந்த வாலிபர்கள் அவர்கள் கையில் வைத்து இருந்த மிளகாய் பொடியை முகத்தில் தூவி விட்டு தப்பி ஓடினர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அனிதா திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் தப்பி ஓடிய 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். பின்னர் பொதுமக்கள் 2 பேரையும் காட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த சதீஷ் (21), லிக்னேஷ்வரன் (25) என்பது தெரிய வந்தது.

    போலீசார் இவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் கோவை அருகே உள்ள நீலாம்பூரில் தங்கி இருப்பதும், மூதாட்டி தனியாக வசிப்பதை கண்காணித்து கொள்ளையடிக்க வந்ததும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட சதீஷ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1500 மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றன.
    • தீயணைப்புத்துறை வீரர்களை வரவழைத்து கழிவறையின் கதவை உடைத்து உள்ளே பதுக்கி இருந்த வாலிபரை பிடித்து நத்தம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நகரின் மையப் பகுதியில் இருந்து வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1500 மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றன. இந்நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் பள்ளி கழிவறையில் பதுங்கி இருந்துள்ளார்.

    இதைப் பார்த்த கழிவறைக்கு சென்ற மாணவிகள் கூச்சலிட்டவாறு பதட்டத்துடன் சென்று இதுகுறித்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக அங்கு சென்ற தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பார்த்தபோது வாலிபர் ஒருவர் கழிவறைக்குள் கதவை சாத்திக் கொண்டு திறக்காமல் இருந்துள்ளார்.

    இதையடுத்து அருகில் இருந்த தீயணைப்புத்துறை வீரர்களை வரவழைத்து கழிவறையின் கதவை உடைத்து உள்ளே பதுக்கி இருந்த வாலிபரை பிடித்து நத்தம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, சப் இன்ஸ்பெக்டர் விஜய பாண்டியன் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நத்தம் காமராஜர் நகரைச் சேர்ந்த சின்னவர் மகன் பெரியசாமி (வயது 24)என்பது தெரியவந்தது.

    மேலும் வாலிபர் எதற்காக கழிவறைக்கு சென்றார்? வேறு குற்ற வழக்குகளில் ஏதும் தொடர்புடையவரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சாலையில் தடையை மீறி வாலிபர் ஒருவர் ஓட்டிச் சென்றார்.
    • ஐ.டி. ஊழியரான அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை அபிராமபுரம் சி.பி.ராமசாமி சாலை, பிம்மண்ணா கார்டன் சாலை சந்திப்பு அருகே அடுக்கு மாடி குடியிருப்பு வாசலில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை முதலமைச்சர் சென்ற சாலையில் தடையை மீறி வாலிபர் ஒருவர் ஓட்டிச் சென்றார்.

    அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த வாலிபரின் பெயர் அஜய்குமார் என்பது தெரியவந்தது. ஐ.டி. ஊழியரான அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    • கார் சாவியை பறித்து தலையில் வெட்டி துணிகர கொள்ளை
    • 5 பேர் கும்பலுக்கு போலீசார் வலை

    கோவை,

    கோவை சூலூர் அருகே உள்ள நீலாம்பூரை சேர்ந்தவர் பிரசாந் (வயது29). கால்டாக்சி டிரைவர்.

    சம்பவத்தன்று இவர் இரவு பணியில் இருந்த போது கால்டாக்சி ஆப் மூலமாக சின்னியம்பாயைத்தில் இருந்து டீச்சர் காலனி செல்வதற்கு கார் புக்கிங் செய்யப்பட்டது.

    இதனையடுத்து டாக்சி டிரைவர் பிரசாத் புக் செய்யப்பட்ட இடத்துக்கு சென்றார். அங்கு நின்று கொண்டு இருந்த 5 வாலிபர்கள் காரில் ஏறினர்.

    அப்போது அவர்கள் வெங்கடாபுரத்தில் நண்பர் ஒருவரை இறக்க வேண்டும் என்றனர். இதனையடுத்து பிரசாத் காரை ஓட்டிக்கொண்டு மாநராடு மைதானம் அருகே சென்று காரை நிறுத்தினார்.

    அப்போது 5 பேரும் சேர்ந்து திடீரென பிரசாத்தி டம் கார் சாவியை பறித்த னர். அவர்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து அவரது தலையில் வெட்டினர். பின்னர் பிரசாத்திடம் இருந்து ரூ.6 ஆயிரம் பணம் மற்றும் 3 செல்போன்களை பறித்த னர். அவர்கள் 5 பேரும் சேர்ந்து பிரசாத்தை மிரட்டி காருடன் ராவுத்தூர் ரெயில்வே கேட் அருகே சென்றனர். பின்னர் காரை கொடுத்து மிரட்டி அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கால்டாக்சி டிரைவர் பிரசாத் சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கால்டாக்சி புக் செய்து டிரைவரை கத்தியால் குத்தி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 5 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    ×