உள்ளூர் செய்திகள்

கத்தி முனையில் செல்போன் பறித்தவர் கைது

Published On 2022-07-26 09:32 GMT   |   Update On 2022-07-26 09:32 GMT
  • கத்தி முனையில் செல்போன் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
  • தப்பி ஓடிய மேலும் ஒருவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

மதுரை

மதுரை கோரிப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜாபர் அலி (வயது 44). இவர் சம்பவத்தன்று மாலை தமுக்கம் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர், கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றனர்.

இது தொடர்பாக ஜாபர் அலி தல்லாகுளம் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஹார்விப்பட்டி சுப்பிரமணியம் மகன் பிரகாஷ் (19) என்பவர், இன்னொரு நபருடன் சேர்ந்து செல்போன் பறித்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து தல்லாக்குளம் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார், ஜாபர் அலியிடம் செல்போன் பறித்ததாக பிரகாஷை கைது செய்தனர். இது தவிர தப்பி ஓடிய மேலும் ஒருவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் எழுமலை, தச்சம்பட்டியை சேர்ந்தவர் முருகன் (53). இவருக்கு அந்த பகுதியில் தோட்டம் உள்ளது. அங்கு உள்ள போர்வெல் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்ல வசதியாக, ரூ.20 ஆயிரம் செலவில், 200 மீட்டர் நீளத்துக்கு மின்வயர்களை பொருத்தி இருந்தார்.

சம்பவத்தன்று இரவு முருகன் தோட்டத்தை பூட்டிவிட்டு, வீட்டுக்கு சென்றார். அப்போது மர்ம கும்பல் தோட்டத்துக்குள் புகுந்து, அங்கிருந்த 200 மீட்டர் மின்வயரை திருடி சென்று விட்டது.

இதுகுறித்த புகாரின்பேரில் எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கீழமட்டியான் தெற்கு தெருவை சேர்ந்த 15 வயது சிறுவன், இரண்டு 17 வயது சிறுவர்கள், கீழமட்டியான் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

Similar News