உள்ளூர் செய்திகள்

லாரி மோதி முதியவர் சாவு

Published On 2022-07-01 08:41 GMT   |   Update On 2022-07-01 08:41 GMT
  • லாரி மோதி முதியவர் இறந்தார்.
  • பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சின்னபூலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுராமன் (வயது 62). இவரது மனைவி பாண்டியம்மாள்.

சேதுராமன் நேற்று மதியம் பேரையூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் இருந்து உசிலம்பட்டி சாலை வழியாக வந்து கொண்டிருந்தார். சின்னப்பூலாம்பட்டி ராமலிங்க சுவாமி கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி மோதியது, இதில் படுகாயம் அடைந்த சேதுராமன் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

விபத்து குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News