உள்ளூர் செய்திகள்

கைதான மாரீஸ்வரன்.

கஞ்சா-பணத்துடன் சிக்கிய வாலிபர்

Published On 2022-06-18 09:40 GMT   |   Update On 2022-06-18 09:40 GMT
  • அவனியாபுரத்தில் கஞ்சா, ரூ. 1 லட்சம் பணத்துடன் வாலிபர் சிக்கினார்.
  • விசாரணையில் அவர் மாநகராட்சி காலனி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

அவனியாபுரம்

மதுரை அவனியாபுரம் காவல் துறையினருக்கு மாநகராட்சி காலனி பகுதியில் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து காவல் உதவி ஆணையர் ரமேஷ் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சேதுராமன் ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவனியாபுரம் மாநகராட்சி காலனி டாஸ்மார்க் கடை அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வெள்ளைநிற சாக்குப் பையுடன் ஒருவர் இருந்தார். அவரை அழைத்து போலீசார் விசாரணை செய்தபோது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

இதில் சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் சாக்குப்பையில் கஞ்சா இருப்பதை கண்டு பிடித்தனர்.

அவரிடம் இருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்து 780 ரொக்கம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர் மாநகராட்சி காலனி பகுதியை சேர்ந்த வழிவிட்டாள் என்பவரின் மகன் மாரீஸ்வரன் (வயது 21) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News