உள்ளூர் செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை

Published On 2022-09-22 08:55 GMT   |   Update On 2022-09-22 08:55 GMT
  • 39 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
  • அந்தப் பெண்ணுக்கு இது 3-வது திருமணம் ஆகும்.

கோவை,

கோவை சூலூர் அருகே உள்ள தென்ன ம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரத்தினசீலன் (வயது 30) தனியார் மில்லில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு 39 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். அந்தப் பெண்ணுக்கு இது 3-வது திருமணம் ஆகும். இந்த நிலையில் கணவன் -மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனை அடைந்த அந்த இளம்பெண் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.மனைவி பிரிந்து சென்றதால் ரத்தினசீலன் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்தவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்து மயங்கிவிழுந்தார். அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  

Tags:    

Similar News