உள்ளூர் செய்திகள்

வாகன விபத்தில் ஒருவர் பலி

Published On 2022-12-13 06:41 GMT   |   Update On 2022-12-13 06:41 GMT
  • வாகன விபத்தில் ஒருவர் பலியானார்
  • சம்பவ இடத்திலேய உயிரிழந்தார்

கரூர்

கரூர் மாவட்டம், குப்புச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 54). இவர் சம்பவத்தன்று மாலை, வாங்கல் அருகே சிவியம்பாளையம் பிரிவு பகுதியில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த கவுதம் (35) என்பவர் ஓட்டி வந்த கார், பெருமாள் ஓட்டி சென்ற பைக்கின் பின்பகுதியில் மோதியது. இதில், கீழே விழுந்த பெருமாள், தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வந்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News