- கார் மோதி முதியவர் பலியானார்.
- நடந்து சென்று கொண்டிருந்தார்.
கரூர்:
கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மணவாசி இந்திரா நகரை சேர்ந்தவர் பாப்பாநாயக்கர் (வயது 70). இவர் சம்பவத்தன்று திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே கோராகுத்தி பிரிவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி மாவட்டம், தொட்டியம் எம்.புத்தூரை சேர்ந்த கேசவன் (23) என்பவர் ஓட்டி வந்த கார் பாப்பாநாயக்கர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பாப்பாநாயக்கர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பாப்பாநாயக்கர் மகன் கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.