உள்ளூர் செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
- புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது ெசய்யப்பட்டனர்
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
கரூர்:
கரூர் தான்தோன்றிமலை, பசுபதி பாளையம் பகுதிகளில், புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்றதாக, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிசேகரன் மற்றும் போலீசார், ராயனுார், தில்லை நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களை விற்றதாக, அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 52) என்பவரை, போலீசார் கைது செய்தனர்.இதேபோல், சணப்பிரட்டி தொழிற் பேட்டை பகுதியில், புகையிலை, குட்கா பொருட்களை விற்றதாக எஸ். வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்த லோகநாதன் (69) என்பவரை, பசுபதி பாளையம் சப்இன்ஸ்பெக்டர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.