உள்ளூர் செய்திகள்
ஆசாரிபள்ளத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம்
- மருத்துவமனை வளாகத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மனநிலை பாதித்தோர் வார்டு அருகில் முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
அவரைப் பார்த்த மருத்துவ கல்லூரி பணியாளர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சிவசங்கரன் கொடுத்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
முதியவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.