உள்ளூர் செய்திகள்

கருங்கல் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி

Published On 2023-06-20 06:54 GMT   |   Update On 2023-06-20 06:54 GMT
  • மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
  • கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி :

கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் கண்ணன் விளை பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது மகன் அனீஸ் (வயது 27).

இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று அனீஸ் கண்ணன்விளையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பராமரிப்பு பணி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அனீசை மின்சாரம் தாக்கியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அனீஸ் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலன் இன்றி அனீஸ் இரவில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அனீஸ் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அவரது உறவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனீஸ் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.

Tags:    

Similar News