உள்ளூர் செய்திகள்

தடையை மீறி பேரணி சென்ற பா.ஜ.க.வினர் 10 பேர் மீது வழக்கு

Published On 2022-06-09 09:51 GMT   |   Update On 2022-06-09 09:51 GMT
  • பா.ஜ.க. இளைஞர் அணியினர் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
  • கார் பேரணியாக பா.ஜ.க. இளைஞர் அணியினர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

கன்னியாகுமரி:

பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞர்அணி சார்பில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இதற்கிடையில் தடையை மீறி கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிள் பேரணி செல்வதற்காக பா.ஜ.க. இளைஞர் அணியினர் நேற்று முன்தினம் கன்னியாகுமரி பழைய பஸ்நிலைய ரவுண்டானா சந்திப்பில் திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் பா.ஜ.க. இளைஞர் அணியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக போலீசார் நடத்திய சமரசப் பேச்சு வார்த்தையின் அடிப்படையில் கார் பேரணியாக பா.ஜ.க. இளைஞர் அணியினர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தடையை மீறி மோட்டார் சைக்கிள் பேரணி செல்ல முயன்றதாக பா.ஜ.க. இளைஞர் அணியினர் 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

Tags:    

Similar News