உள்ளூர் செய்திகள்

கடையில் இருந்த பொருட்கள் எடுத்து வாகனத்தில் ஏற்றப்பட்டது.

பஸ் நிலையத்தில் காலி செய்ய மறுத்த கடையில் இருந்து பொருட்கள் எடுக்கப்பட்டன

Published On 2022-07-27 10:23 GMT   |   Update On 2022-07-27 10:23 GMT
  • ஏலத்தில் கலந்துகொண்டு ஏலம் எடுத்தவர்களுக்கு உரிய கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்படைக்கப்ட்டன.
  • கடையை ஒப்படைக்கும்படி பேரூராட்சி நிர்வாகம் பலமுறை அறிவித்தும் முன் ஏலதாரர் ஒப்டைக்க மறுத்து வந்தார்.

திருவையாறு:

திருவையாறு பஸ்நிலையத்தில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் சமீபத்தில் 2022-2025 ஆண்டுகளுக்கான ஏலம் பேரூராட்சி நிர்வாக த்தினரால் விடப்பட்டது. ஏலத்தில் கலந்துகொண்டு ஏலம் எடுத்தவர்களுக்கு உரிய கடைகள்ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்படை க்கப்ட்டன. இந்நிலையில், ஏற்கனவே 2 -ம் நம்பர் கடையை நடத்திய முன் ஏலதாரர் இவ்வாண்டுக்கான ஏலத்தில் கலந்து கொள்ளாமலும் பழைய ஏல உரிமைக் காலம் முடிந்த பின் கடையை பேரூராட்சியிடம் ஒப்படைக்காமலும் ஆக்கிர மித்துக் கொண்டிருந்தார். கடையை ஒப்படைக்கும்படி பேரூராட்சி நிர்வாகம் பலமுறை அறிவித்தும் முன் ஏலதாரர் ஒப்டைக்க மறுத்து வந்தார்.

இதையடுத்து அந்தக் கடையை திருவையாறு பேரூராட்சி நிர்வாகமே முன்வந்து நடவடிக்கை மேற்கொண்டு கடையிலிருந்த மரச் சாமான்கள் உட்பட அனைத்துப் பொரு ட்களையும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தி பேரூராட்சி குப்பை வேனில் ஏற்றிச் சென்றது. மேலும், காலி செய்யப்பட்ட அந்த 2-ம் நம்பர் கடையை இவ்வாண்டு ஏலம் எடுத்துள்ள உரிய நபரிடம் பேரூராட்சி நிர்வா கத்தினால் ஒப்படைக்க ப்பட்டது.

திருவையாறு பேரூராட்சி செயல்அலுவலர் சோமசு ந்தரம், பேரூராட்சி துணை த்தலைவர் நாகராஜன், வார்டு உறுப்பினர்கள், வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர் பழனி, போலீசார் முன்னிலையில் கடை அப்புறப்படுத்தப்பட்டு ஏலதாரரிடம் ஒப்படைக்க ப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News