உள்ளூர் செய்திகள்
- குமாரபாளையம் ஜானு ஓமியோ கிளினிக் மற்றும் சேவை சங்கத்தார் சார்பில் நகராட்சி பூங்கா எதிரில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
- இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் ஜானு ஓமியோ கிளினிக் மற்றும் சேவை சங்கத்தார் சார்பில் நகராட்சி பூங்கா எதிரில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில் டாக்டர்கள் ஜனனி, இந்திரா, தமிழரசு மற்றும் குழுவினர் பங்கேற்று பொதுமக்களுக்கு சர்க்கரை வியாதி, சிறுநீரக கோளாறு, தைராய்டு, ஆஸ்துமா, தோல் வியாதிகள், நரம்பியல் நோய்கள், குழந்தையின்மை, கர்ப்பபை நீர் கட்டிகள் உள்ளிட்ட பல நோய்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கினர்.
இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.