உள்ளூர் செய்திகள்

பணகுடியில் மொபட் மீது கார் மோதி தந்தை-மகள் பலி

Published On 2022-07-26 10:05 GMT   |   Update On 2022-07-26 10:05 GMT
  • பணகுடி முத்துசாமிபுரம் போக்குவரத்து தடுப்பை கடந்து சென்ற போது அவ்வழியாக சென்ற கார் அவர்கள் மீது மோதியது.
  • விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கார் டிரைவர் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணகுடி:

நெல்லை மாவட்டம் பணகுடி முத்துசாமிபுரத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது55). இவரது மகள் ஜான்சி (24). இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.

கார் மோதி விபத்து

ஜான்சி வள்ளியூரில் உள்ள தனியார் டெய்லரிங் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஜான்சி இன்று காலை வேலைக்கு புறப்பட்டபோது அவரது தந்தை அய்யப்பன் தனது மொபட்டில் அழைத்து சென்றார்.

அவர்கள் பணகுடி முத்துசாமிபுரம் போக்குவரத்து தடுப்பை கடந்து சென்ற போது அவ்வழியாக சென்ற கார் அவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜான்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தந்தையும் பலி

தகவலறிந்த பணகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த அய்யப்பனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

தொடர்ந்து ஜான்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கார் டிரைவர் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News