உள்ளூர் செய்திகள்

நெல்லை-தாம்பரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு - முன்பதிவு தொடங்கியது

Published On 2022-09-08 09:45 GMT   |   Update On 2022-09-08 09:48 GMT
  • நெல்லை - தாம்பரம் வாராந்திர சிறப்பு கட்டண ரெயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

செங்கோட்டை:

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க அம்பாசமுத்திரம், ராஜபாளையம், மதுரை வழியாக இயக்கப்படும் நெல்லை - தாம்பரம் வாராந்திர சிறப்பு கட்டண ரெயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நெல்லை - தாம்பரம் வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் (06004) நெல்லையில் இருந்து வருகிற 18-ந் தேதி முதல் ஜனவரி 29-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் தாம்பரம் - நெல்லை வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் (06003) தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 19-ந் தேதி முதல் ஜனவரி 30-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.40 மணிக்கு நெல்லை வந்து சேரும். இந்த ரெயில்களுக்கான முன் பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.

Tags:    

Similar News