உள்ளூர் செய்திகள்
தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பிளஸ்- 2 மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி
- கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மாத தேர்வு எழுதிய மாணவி மதிப்பெண் குறைவாக எடுத்தார்.
- இதனால் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
சேலம், ஆக. 18-
சேலம் மன்னார்பாளையம் அருகே உள்ள அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி சேலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மாத தேர்வு எழுதிய மாணவி மதிப்பெண் குறைவாக எடுத்தார். இதில் மனமுடைந்து காணப்பட்ட மாணவி நேற்று இரவு 11 மணி அளவில் திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதைக் கண்ட குடும்பத்தி–னர், அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.