பரமத்தி வேலூரில் தேங்காய் ரூ.1 லட்சத்து 35-க்கு விற்பனை
- அதிகபட்சமாக கிலோ ரூ.25-க்கும், குறைந்த பட்சமாக ரூ.21.77-க்கும், சராசரியாக ரூ.24-க்கும் ஏலம் போனது.மொத்தம் ரூ.67 ஆயிரத்து 166-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
- ஏலத்திற்கு 5 ஆயிரத்து 535 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மின்னனு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் போனது. பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் முழுத்தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 2ஆயிரத்து 791 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.25-க்கும், குறைந்த பட்சமாக ரூ.21.77-க்கும், சராசரியாக ரூ.24-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.67 ஆயிரத்து 166-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
நேற்று செவ்வாய்க் கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 5 ஆயிரத்து 535 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.25.11 -க்கும், குறைந்தபட்சமாக ரூ20- க்கும், சராசரியாக ரூ.24.51-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 544 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.