உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

அவினாசி அருகே பெண்ணிடம் நகைபறிப்பு

Published On 2022-06-23 05:23 GMT   |   Update On 2022-06-23 05:23 GMT
  • இந்த சிகரெட் இல்லை வேறு சிகரெட் கொடுங்கள் என கேட்டுள்ளாா்.
  • கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற மர்மநபர்

அவிநாசி :

அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம் பெரியகருணைபாளையத்தைச் 2சோ்ந்த அமல்ராஜ் மனைவி அபிதாமேரி (வயது 24). இவா் சின்னக்கருணை பாளையத்தில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். அபிதாமேரி கடையில் இருந்துள்ளாா்.

அப்போது, அங்கு வந்த நபா் அபிதாமேரியிடம் சிகரெட் வாங்கிச் சென்றுள்ளாா். சிறிது நேரம் கழித்த வந்த நபா் இந்த சிகரெட் இல்லை வேறு சிகரெட் கொடுங்கள் என கேட்டுள்ளாா். அவா் திரும்பிய நேரத்தில், அவரது கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளாா்.

இது குறித்து அவிநாசி காவல் நிலையத்தில் அபிதாமேரி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி மர்மநபரை வருகின்றனா்.

Tags:    

Similar News