உள்ளூர் செய்திகள்

ஓட்டல் ஊழியரிடம் செல்போன் பறிப்பு

Published On 2022-10-22 09:11 GMT   |   Update On 2022-10-22 09:11 GMT
  • திருப்பத்தூர் மாவட்டம் கவுண்டப்பனூர் பகுதியை சேர்ந்தவரிடம் செல்போனை பறித்தனர்.
  • தாதகாப்பட்டி உழவர் சந்தை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

சேலம்:

திருப்பத்தூர் மாவட்டம் கவுண்டப்பனூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் ஹரிஹரன் (வயது 23). இவர் சேலம் தாதகாப்பட்டி சௌந்தர் நகர் பகுதியில் தங்கி தாதகாப்பட்டி கேட் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.ஹரிஹரன் நேற்று இரவு ஓட்டலில் வேலை முடிந்து தனது அறைக்கு செல்ல தாதகாப்பட்டி உழவர் சந்தை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ஹரிஹரன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News