உள்ளூர் செய்திகள்
ஹெல்மெட் அணியாத 10 ஆயிரம் பேர் மீது வழக்கு
- சேலம் மாநகரில் கடந்த 1ந் தேதி முதல் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீஸ் ஆணையர் உத்தரவிட்டார்.
- இந்நிலையில் ஹெல்மெட் அணியாத வாகனங்களுக்கு 10 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
சேலம்:
சேலம் மாநகரில் கடந்த 1ந் தேதி முதல் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீஸ் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார்.
தொடர் கண்காணிப்பு
இதையடுத்து சேலம் மாநகரில் 23 இடங்களில் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் கடந்த 1ந் தேதி தொடங்கி 10ந் தேதி வரையிலான 10 நாட்கள் ஹெல்மெட் அணியாத 10 ஆயிரம் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதக்கப்பட்டது.
ரூ.10 லட்சம் அபராதம்
அதன் படி 10 நாட்களில் ரூ.10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் தங்களின் பாதுகாப்பை உணர்ந்து தலைகவசம்