உள்ளூர் செய்திகள்
நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி முதியவர் பலி- மகனுக்கு தீவிர சிகிச்சை
- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரத்தை சேர்ந்தவர் பாக்கியசாமி (வயது59). தொழிலாளி. இவரது மகன் மனோஜ் (28).
- பாக்கியசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரத்தை சேர்ந்தவர் பாக்கியசாமி (வயது59). தொழிலாளி. இவரது மகன் மனோஜ் (28).
தந்தை-மகன் இருவரும் இன்று காலை மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மானூர் அருகே உள்ள சேதுராயன்புதூர் பகுதியில் வந்த போது எதிரே சங்கரன்கோவில் நோக்கி சென்ற கார் அவர்கள் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட பாக்கியசாமி சம்பவ இடத்திலேயே பலியா னார். மனோஜ் படுகாய மடைந்தார். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற மானூர் போலீசார் மனோஜை மீட்டு நெல்லை அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பாக்கியசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.