உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி தொழிலாளி பலி

Published On 2022-06-27 09:22 GMT   |   Update On 2022-06-27 09:22 GMT
  • காவல்கிணறு-வடக்கன்குளம் சாலையில் கணேசன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
  • பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணகுடி:

வள்ளியூர் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் கணேசன்(வயது 45). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு காவல்கிணறு-வடக்கன்குளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக எதிரே வந்த ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு நாகர்கோவில் ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News