களக்காடு அருகே தொழிலாளியை சரமாரியாக தாக்கிய கடை உரிமையாளர்
- களக்காடு அருகே உள்ள வடுகச்சிமதில், பசும்பொன் நகரை சேர்ந்தவர். சுப்பிரமணியன் மகன் தங்கபாஸ்கர் (வயது27). கூலி தொழிலாளி.
- அவரது 2 வயது பெண் குழந்தை கையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் காலி பாக்கெட்டை வைத்து விளையாடி கொண்டிருந்தது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள வடுகச்சிமதில், பசும்பொன் நகரை சேர்ந்தவர். சுப்பிரமணியன் மகன் தங்கபாஸ்கர் (வயது27). கூலி தொழிலாளி.
சம்பவத்தன்று மாலை இவர் வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பினார். அப்போது அவரது 2 வயது பெண் குழந்தை கையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் காலி பாக்கெட்டை வைத்து விளையாடி கொண்டிருந்தது.
இதைப்பார்த்த தங்க பாஸ்கர் குழந்தையிடம் கேட்ட போது, அப்பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நடத்தி வரும் மளிகை கடைக்கு அருகில் இருந்து புகையிலை பாக்கெட்டை எடுத்ததாக தெரிவித்தது.
இதையடுத்து தங்கபாஸ்கர், மணிகண்டன் கடைக்கு சென்று அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை குழந்தைகள் வரும் இடத்தில் வைக்கலாமா? என்று தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், தங்கபாஸ்கரை அவதூறாக பேசி, இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார்.
காயமடைந்த தங்கபாஸ்கர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுப்பு–ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கடை உரிமையாளர் மணிகண்டனை தேடி வருகிறார்.