உள்ளூர் செய்திகள்

பெரியநாயக்கன்பாளையத்தில் குடிக்க தாய் பணம் தராததால் வாலிபர் தற்கொலை

Published On 2022-10-03 10:48 GMT   |   Update On 2022-10-03 10:48 GMT
  • விஜய் வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
  • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

கோவை சூலூர் கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 30). இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று விஜய் தனது தாயாரிடம் குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் தர மறுத்தார். இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்வா (24). இவர் தனியார் நிறுனத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்து குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

சம்பவத்தன்று வழக்கம் போல ஜோஸ்வா குடிபோதையில் வீட்டுக்கு வந்து குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது அவரது தாயார் கண்டித்து குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கூறினார்.

இதனால் மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News