உள்ளூர் செய்திகள்

8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

Published On 2022-09-19 08:37 GMT   |   Update On 2022-09-19 08:37 GMT
  • சேலம் அஸ்தம்பட்டி கோர்ட்டு ரோடு காலணியை சேர்ந்தவர் சிவகுரு. இவரது மகன் தற்கொலை செய்து கொண்டார்.
  • இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் செல்போன் பார்ப்பதை கண்டித்தும் தற்கொலைக்கு காரணம் என தெரியவந்தது.

சேலம்:

சேலம் அஸ்தம்பட்டி கோர்ட்டு ரோடு காலணியை சேர்ந்தவர் சிவகுரு. இவரது மகன் அரசு குரு. ( வயது 14). இவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த அரசு குரு நேற்று அருகில் உள்ள சந்தோஷ் என்பவரது வீட்டிற்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர்.

இது குறித்து அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் . பின்னர் அரசு குரு உடலை மீட்டு பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் இருந்த அரசு குருவை பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்தியதும், மேலும் செல்போன் பார்ப்பதை கண்டித்தும் தற்கொலைக்கு தற்கொலைக்கு காரணம் என தெரியவந்தது. இதனால் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News