உள்ளூர் செய்திகள்

விடுமுறை நாளையொட்டி 300 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2023-08-09 10:08 GMT   |   Update On 2023-08-09 10:08 GMT
  • மொத்தம் 300 சிறப்பு பஸ்கள் 11, 12, 14 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.
  • சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்கம்.

கும்பகோணம்:

கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் விடுமுறை நாளான வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை), 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 15-ந்தேதி சுதந்திர தினத்தை யொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

பொதுமக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்ப டுகிறது.

இதேபோல், சென்னையி லிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி. ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேலும், திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கும் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

மொத்தம் 300 சிறப்பு பஸ்கள் 11, 12, 14 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.

அதே போன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப வசதியாக வருகிற 13 மற்றும் 15-ந்தேதிகளில் சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பயணிகள் ஊருக்கு செல்ல வசதியாக முன்பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் இந்த பஸ் வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News