உள்ளூர் செய்திகள்
.

ஓசூரில் துயர சம்பவம் கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார்

Published On 2022-05-28 09:38 GMT   |   Update On 2022-05-28 09:38 GMT
ஓசூரில் துயர சம்பவம் கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார்
ஓசூர்,

ஓசூர் மாநகராட்சி பாரதியார் நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 70). ஓய்வு பெற்ற  ஆசிரியர். இவரது மனைவி கோமதி வயது 63).  நேற்று அதிகாலை 3 மணியளவில்  மாணிக்கத்து க்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். கணவர் இறந்ததையடுத்து கோமதி மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.  இந்நிலையில் காலை 8 மணிக்கு கோமதியும் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். 

கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  சாவிலும் இணைபிரியாத இந்த தம்பதி குறித்து அப்பகுதி மக்கள் ஆச்சரியமும்,சோகமும் ததும்ப தகவல் பகிர்ந்து கொண்டனர்.
Tags:    

Similar News