உள்ளூர் செய்திகள்
ஓசூரில் துயர சம்பவம் கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார்
ஓசூரில் துயர சம்பவம் கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார்
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சி பாரதியார் நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 70). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி கோமதி வயது 63). நேற்று அதிகாலை 3 மணியளவில் மாணிக்கத்து க்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். கணவர் இறந்ததையடுத்து கோமதி மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் காலை 8 மணிக்கு கோமதியும் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாவிலும் இணைபிரியாத இந்த தம்பதி குறித்து அப்பகுதி மக்கள் ஆச்சரியமும்,சோகமும் ததும்ப தகவல் பகிர்ந்து கொண்டனர்.