உள்ளூர் செய்திகள்
.

நாயை கடத்திய 2 வாலிபர்கள் கைது

Published On 2022-05-21 10:11 GMT   |   Update On 2022-05-21 10:11 GMT
சேலம் சின்னதிருப்பதியில் நாயை கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்தனர்.
சேலம்:

சேலம் சின்ன திருப்பதியை சேர்ந்த ஒருவர் வீட்டில் விலை உயர்ந்த  நாயை வளர்த்து வந்தார். 

இந்த நிலையில்  கடந்த  25 நாட்களுக்கு  முன்பு அந்த நாய்  திடீரென காணாமல்போனது.  இதனால் அதிர்ச்சி அடைந்த நாயின் உரிமையாளர்  விசாரித்த போது  2 வாலிபர்கள் அதனை கடத்தி சென்றது தெரிய வந்தது. 

இது தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசில் அவர்  புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி நாயை கடத்தி  சென்ற சேலம்  ஜான்சன் பேட்டையை சேர்ந்த சண்முகம் (22), கொண்டப்ப–நாயக்கன்பட்டியை சேர்ந்த  நவீன் (25)  ஆகிய 2 பேரையும் கைது  செய்தனர்.
Tags:    

Similar News