உள்ளூர் செய்திகள்
சேலம் சின்னதிருப்பதியில் நாயை கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்தனர்.
சேலம்:
சேலம் சின்ன திருப்பதியை சேர்ந்த ஒருவர் வீட்டில் விலை உயர்ந்த நாயை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு அந்த நாய் திடீரென காணாமல்போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாயின் உரிமையாளர் விசாரித்த போது 2 வாலிபர்கள் அதனை கடத்தி சென்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசில் அவர் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி நாயை கடத்தி சென்ற சேலம் ஜான்சன் பேட்டையை சேர்ந்த சண்முகம் (22), கொண்டப்ப–நாயக்கன்பட்டியை சேர்ந்த நவீன் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.