உள்ளூர் செய்திகள்
தமிழக முதல்வரின் ஓராண்டு கால ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம்
தமிழக முதல்வரின் ஓராண்டு கால ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்:
தமிழக முதல்வரின் ஓராண்டு கால ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் ஊராட்சி குழு தலைவருமான குன்னம் ராஜேந்திரன் தலைமைதாங்கினார். ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவரும் கிழக்கு ஒன்றிய செயலாளருமான கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார், வேப்பூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் கல்யாணம், தலைமை கழக பேச்சாளர் அத்திப்பட்டு காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசும் போது,
ஓராண்டில் சாதனையான பல்வேறு நலத்திட்டங்கள் முதல்வர் செயல்படுத்தியுள்ளார். அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட கடன் 5 லட்சம் கோடி நிலுவையில் இருக்கும் நிலையில், எந்தத் தொழிலும் நடக்காமல் அரசுக்கு வருவாய் இல்லாத சூழலிலும் நம் முதல்வர் தேர்தல் நேரத்தில் கொடுத்த
வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், கொரோனா காலத்தில் நிவாரணம், என் உயிர் காப்போம் திட்டம் என பல திட்டங்கள் குறித்து விழாவில் பங்கேற்ற மக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.