உள்ளூர் செய்திகள்
மதுரையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவருடன் சென்ற பெண் பலியானார்.
மதுரை
மதுரை புது விளாங்குடியைச் சேர்ந்தவர் பாலு (வயது 55). இவர் சம்பவத்தன்று காலை மனைவி மகேஸ்வரியுடன் (46) மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டுச் சென்றார்.
திண்டுக்கல் மெயின் ரோடு, பாத்திமா கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விபத்துக்கு ள்ளானது. இதில் 2 பேரும் கீழே விழுந்தனர். மகேஸ்வரி படுகாயத்துடன் மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.