உள்ளூர் செய்திகள்
ஆம்பூர் அருகே கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்ட காட்சி

ஆம்பூர் அருகே கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு

Published On 2022-05-19 09:52 GMT   |   Update On 2022-05-19 09:52 GMT
ஆம்பூர் அருகே கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது.
ஆம்பூர்:

ஆம்பூர் அருகே சின்ன கொமேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் விவசாயி இவருக்கு சொந்தமான விவசாய கிணறு அதே பகுதியில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை அருகில் உள்ள வனப்பகுதியிலிருந்து ஆண் புள்ளிமான் ஒன்று வழி தவறி வந்து இவரது கிணற்றில் விழுந்து தத்தளித்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஆம்பூர் வனத்துறைக்கும் தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து சென்ற தீயணைப்பு மீட்புப் படையினர் கயிறு கட்டி கிணற்றில் இருந்த மானை உயிருடன் மீட்டனர்.

பின்னர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.  வனத்துறையினர் மானுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து ஆம்பூர் காப்புக் காட்டில் விட்டனர்.
Tags:    

Similar News