உள்ளூர் செய்திகள்
.

தளியில் வாகனம் மோதி தொழிலாளி சாவு

Published On 2022-05-19 09:15 GMT   |   Update On 2022-05-19 09:15 GMT
தளியில் வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.
தருமபுரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள ஓட்டர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது35). இவர் நேற்று தளி பகுதியில் சென்று கொண்டிருந்தார். 
அப்போது அந்த வழியாக வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக அவர் மீது  மோதியது. 

இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ரவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News