உள்ளூர் செய்திகள்
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வாலிபர் கைது
ரவுடி என கூறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் எடப்பாடி சாலை, தினசரி காய்கறி மார்க்கெட் அருகே நேற்று வாலிபர் ஒருவர் ரவுடி என்று கூறி பொதுமக்களை மிரட்டி வந்தார்.
மேலும் அவ்வழியே சென்ற அரசு பஸ்களை சேதப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து குமாரபாளையம் போலீசார் அங்கு சென்று அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர் குமாரபாளையம், விட்டலபுரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 31) என்பது தெரியவந்தது. போலீசார், அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கைது செய்தனர்.