உள்ளூர் செய்திகள்
மதிகோன்பாளையம் அருகே பைக் மோதி விவசாயி படுகாயம்
மதிகோன்பாளையம் அருகே பைக் மோதி விவசாயி படுகாயம் அடைந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், புலிக்கரை அடுத்த இருளப்பட்டி கிராமத்தைச சேர்ந்தவர் ராசன் (வயது35). விவசாயியான இவர் தனது இருசக்கர வாகனத்தில் 13-ந் தேதி காலை பால் சொசைட்டிக்கு சென்று பால் ஊற்றி விட்டு ரோட்டை கடக்க முயன்றார்.
அப்போது பின்னால் வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக ராசன் மீது மோதியது. இதில் ராசன் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.