உள்ளூர் செய்திகள்
.

நாமக்கல்லில் கார் டிரைவர் கொலையில் கைதானவர் வாக்குமூலம்

Published On 2022-05-15 09:45 GMT   |   Update On 2022-05-15 09:45 GMT
நாமக்கல்லில் கார் டிரைவர் கொலையில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாமக்கல்:

நாமக்கல் எம்.ஜி.ஆர்நகரை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது29). கார் டிரைவர் இவரது சகோதரி மகன் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சரியாக படிக்கவில்லை என்று  பிரபாகரன்  கண்டித்தார். 

இதுதொடர்பாக, பிரபாகரனை அவரது நண்பர் சைத்தான்(எ) சுரேந்தர்(25) தட்டி கேட்டார். அப்போது பிரபாகரனுக்கும் சுரேந்தருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சுரேந்தருக்கு ஆதரவாக அவரது நண்பரான மார்மாதேவியை சேர்ந்த விக்னேஷ் (29) என்பவர் பேசியுள்ளார். 

தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த பிரபாகரன், விக்னேஷை கத்தியால் சராமாரி குத்தினார். இதில் அவர் குடல் சரிந்து மயங்கி விழுந்தார். இதனை கண்டு பயந்து போன பிரபாகரன், அருகில் உள்ள ஒரு வீட்டில் சென்று பதுங்கி கொண்டார்.

இதை பார்த்த சுரேந்தர் மற்றும் 2 பேர் சேர்ந்து, பிரபாகரன் பதுங்கியிருந்த வீட்டுக்குள் சென்று அவரை வெளியே இழுத்து வந்து சராமாரியாக குத்தினர். இதில் 17 இடங்களில் பிரபாகரனின் உடலில் குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த நாமக்கல் எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி, நாமக்கல் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி ஆகியோர், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பிரபாகரனால் கத்திக்குத்து பட்டு படுகாயமடைந்த விக்னேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கொலை செய்யப்பட்ட பிரபாகரனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தலைமறைவான குற்றவாளிகளை கைது செய்ய எஸ்பி.சாய்சரண் தேஜஸ்வி 5 தனிப்படைகளை அமைத்தார். விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்திய தனிப்படை போலீசார், அதே பகுதியில் பதுங்கி இருந்த சுரேந்தரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 

அப்போது அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் எனது நண்பனை கத்தியால் குத்தி கொல்லை முயன்றதால் பிரபாகரனை கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இந்த கொலை தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News