உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லை அருகே விவசாயியின் ‘மொபட்’ திருட்டு

Published On 2022-05-11 09:33 GMT   |   Update On 2022-05-11 09:33 GMT
நெல்லை அருகே விவசாயியின் ‘மொபட்’ திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை பழைய பேட்டையை அடுத்த வெள்ளாளன்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமையா (வயது70). விவசாயி.

இவர் சம்பவத்தன்று வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக சீதபற்பநல்லூருக்கு சென்றிருந்தார்.  பின்னர் கடை முன்பு மொபட்டை நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்கி உள்ளார்.

சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது அவரது ‘மொபட்’ மாயமானது கண்டு அதிர்ச்சி யடைந்தார். இதுகுறித்து சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் ராமையா புகார் செய்தார்.

புகாரின்பேரில்  போலீ சார் வழக்குப்பதிவு செய்து மொபட்டை  திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News