உள்ளூர் செய்திகள்
நிதி அமைச்சரை கண்டித்து பல்லடத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பல்லடம் கிளை தலைவர் பாண்டியம்மாள் தலைமை வகித்தார்.
பல்லடம்:
பல்லடத்தில், நிதி அமைச்சரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பல்லடம் கிளையின் சார்பில், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த முடியாது என்று கூறிய தமிழக நிதி அமைச்சரை கண்டித்தும், தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான காலி பணியிடங்களை நிரப்ப கோரியும்,கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பல்லடம் கிளை தலைவர் பாண்டியம்மாள் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர் ஆறுச்சாமி, மற்றும் ஆறுமுகம், முருகேசன், சிவக்குமரன், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.