உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

ேபாலீஸ் குடியிருப்பில் கமிஷனர் ஆய்வு

Published On 2022-05-10 07:56 GMT   |   Update On 2022-05-10 07:56 GMT
வேறு என்ன வசதிகள் தேவைப்படுகிறது என்பதை கேட்டறிந்ததோடு வளாகத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்று கமிஷனர் அறிவுறுத்தினார்.
திருப்பூர்:

திருப்பூர் கோர்ட்டு ரோட்டில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 100க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று திருப்பூர் போலீஸ் கமிஷனர் பாபு திடீரென போலீஸ் குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்டார். 

அங்குள்ள போலீசாரின் குடும்பத்தாரிடம் அங்குள்ள குடிநீர் வசதி உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். வேறு என்ன வசதிகள் தேவைப்படுகிறது என்பதை கேட்டறிந்ததோடு வளாகத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்று கமிஷனர் அறிவுறுத்தினார்.
Tags:    

Similar News